Sunday, February 13, 2011

One Boy One Tree


Be the Best - Plant a tree and Plan the future awareness pogram on Creating Greens and Dances of India festival - by avvai tamil sangam.





















 Appa wanted a neem tree nearby our home .  So we chose the neem sapling. Sabhari signed his name with a drawing of a small tree. After that he gave a  pose with the neem plant very proudly.









Amma and Akka  helped him to plant the tree  .  Akka and sabhari  take care of it .
------------------
Neem trees act as air filters that trap dust particles and absorb gaseous pollutants. Neem trees help reduce green house gases by absorbing large quantities of carbon dioxide and producing oxygen. Neem trees give more oxygen than other trees.

The temperature under the shade of a neem tree is about 10 degrees cooler than its surroundings; 10 air conditioners operated together may not be able to cool as efficiently as a full grown neem can.

Neem's ability to withstand extreme heat and water pollution is well-known. It also helps to improve fertility of the soil and to rehabilitate degraded wastelands.







Thursday, January 20, 2011

Dance programme



A local news paper celebrated their anniversary. sab's dance class students performed a good dance show during the celebrations. Before the programme he was complaining, dance classes are so boring and he wants to discontinue . But he enjoyed the show a lot and the great applause from the audience made up his mind to continue his dance classes. Now i find him very confident about his dancing skill.

Sunday, October 10, 2010

10-10-10- BEN 10

Cartoon Network celebrates the day with some hero fun

TODAY is a special day in the calendar. It’s 10.10.10. and Cartoon Network is throwing the biggest and coolest Ben 10 day ever with the exclusive regional premiere of Ben 10: Ultimate Alien at 10am.

The latest instalment from the Ben 10 animated series, Ben 10: Ultimate Alien follows the now 16-year-old hero, Ben Tennyson, as he deals with superstardom after his secret identity is revealed while fighting all-new villains.




Sister and Brother like the cartoon BEN TEN..
They have been waiting for this combo .. and enjoying the moments with BEN TEN series..

Tuesday, October 5, 2010

Candid camera




2010 trip - at Pollachi

Guru Akka (sister) taught her Shisya thambi (brother) a new song. This song was taught in the advertisment break of a cartoon programme..Shisya learnt this song without knowing that it was being recorded . Shisya learnt this song with interest Look his hand actions from 01:00 min of this video.

Saturday, May 22, 2010

Today's game

Today’s game -Helipopper.
Sabhari likes this game.
கணினி விளையாட்டு - பலூன் உடைக்கலாம் வாங்க..

கலர் கலர் பலூன் மேலே இருக்கு.
தொப்பி கலர் மாறுவதை கவனமா கவனிச்சு அந்த கலர் பலூனை மட்டும் உடைக்கனும். வெறுமே மவுசை நகர்த்தும் வேலை தான் எவ்ளோ குட்டியும் விளையாடலாம்.
சில சமயம் அது ஒரே கலரைக் கூட காமிக்கும். ஆனா கலர் மாறும் போது ரொம்பவும் த்ரில்லிங்காக இருக்கும்..உங்க வீட்டு குட்டீஸோட விளையாண்டு பாருங்க.. திரும்ப விளையாடனும்ன்னா ப்ளேக்ரவுண்ட் என்கிற இடத்தைக் க்ளிக் செய்யவும். அங்கே இதை மாதிரி பல விளையாட்டுக்கள் இருக்கு . மீண்டும் இதே விளையாட்டுன்னா அதே கேரக்டரை க்ளிக் செய்யுங்க .. வேற வேற ட்ரை செய்யனும்ன்னா ஒவ்வொண்ணா விளையாண்டு எஞ்சாய் செய்யுங்க லீவை..


Thursday, October 29, 2009

தமிழ் பாடல்கள்

ரொம்ப நாளா தமிழ் பாட்டு ஒண்ணு சொல்லிக்கொடுக்கனும்ன்னு அவன் காதிலே கேக்கறா மாதிரி ”நிலா நிலா ஓடிவா” பாடிக்கிட்டே இருந்ததில் அவன் தானாகவே பின்பாட்டு “வா” வா” எனப் பாட ஆரம்பிச்சு இப்பல்லாம் ஒரு தமிழ்பாட்டுன்னா போதும், உடனடியாக தலைவர் நிலா நிலா ? அப்படின்னு கேட்பார். ஆமாம்ன்னா குஷியா பாடுவார். ஆனா சில நேரம் அது ரீமிக்ஸ் மாதிரி விதவிதமான மாடுலேசனில் வரும். (என்ன ஒரு இசைக்குடும்பமப்பா !!!)


Get this widget | Track details | eSnips Social DNA


-----------------------------------------
குளித்தவுடன் சாமி கும்பிட என்று இந்த பாலும் தெளிதேனும் என்ற பாடலை தினமும் அவனுக்கு சொல்லச்சொல்ல திரும்ப கிளிப்பிள்ளையாக பாடுவான் . இப்போது தானாகவே பாடத்தொடங்கிவிட்டான்.


Get this widget | Track details | eSnips Social DNA



----------------------------------------------
தினம் ஒரு திருக்குறள் என்ற வகையில் போனமாதம் சபரி அப்பா ஒரு 5 திருக்குறளை அறிமுகப்படுத்தினாங்க. முதல் திருக்குறள் செவிச்செல்வமாக அதிகம் கேட்டு கேட்டு அடுத்த வாரம் தானாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டான். ஆனால் அதுவரை மற்ற திருக்குறள்களை சொல்லச்சொல்ல திரும்ப சொல்லிக்கொண்டிருந்தவன் . இதுமட்டும் தான் ஈஸியானது மத்ததெல்லாம் கஷ்டம்ன்னு தானாகவே நம்பிக்கை இழந்து சொல்லவரலை என்று நினைத்துக்கொண்டான். அது அதிகம் தினம் கேட்டால் வந்துவிடும் என்ற நம்பிக்கையை தூண்டிக்கொண்டிருந்ததில் இன்று மற்ற பாடல்களை ரெக்கார்ட் செய்யும் போது தானாகவே நோய்நாடி குறளையும் சொல்லவா என்று கேட்டுவிட்டு தானாகவே சொல்லிவிட்டான்.
பாடும்போது ரெக்கார்டரில் வரும் கலர் கலர் லைட்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.. அதன்காரணமாக சில சமயம் வெவ்வேறு விதமாக சொல்லிப்பார்த்துக்கொண்டிருந்தான்.

Get this widget | Track details | eSnips Social DNA

selvathul selvam

Get this widget | Track details | eSnips Social DNA


noi nadi

Monday, July 20, 2009

தடாலடி பதில்கள்

குளிப்பாட்டுபோது கை வாகாக இருக்க.. சுவற்றைப்பார்க்க உக்காரு என்று சொல்லி முகத்தில் சோப்பு போட்டுவிடுவேன்.3 வயது வரை கேட்டவன். 4 வது வயதில் திரும்ப கேட்டான் . ”சுவறு எல்லா பக்கத்திலயும் தானே இருக்கு?”
“ ஆஹா.. ஆமாம்ப்பா ஆமா.. தண்ணி வாளி இல்லாத சுவற்றுபக்கம் திரும்புப்பா கொஞ்சம்..”
-------------------------------------------
'தூங்கலாம் வாடா"
”மதியம் எதுக்கு தூங்கனும்?”
”தூங்கினாத்தான் வளருவாங்க .. ”

பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த இரண்டுநாள் கழித்து ஒரு மதியம்.

”தூங்கலாம் வாடா
”எதுக்கு தூங்கனும்?”
”வளரத்தான் ...”
”இல்லயே டீச்சர் சொன்னாங்க தூங்கிட்டே இருந்தா வளர முடியாது. சீக்கிரம் எழுந்து பள்ளிக்கூடம் வந்து படிச்சாத்தான் வளரலாமாம்.'
(ஙே ..... :(
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு..)

”அதுவும் சரிதான் அம்மா சொன்னதும் சரிதான். காலையில் எழுந்திருக்கனும் படிக்கனும் .பின்ன மதியம் தூங்கனும். திரும்ப சாயங்காலம் படிக்கனும். ராத்திரி தூங்கனும். காலையில் எழுந்திருச்சு ஸ்கூல் போய் படிக்கனும். ரெண்டும் மாற்றி மாற்றி செய்யனும்ண்டா கண்ணா!..”
--------------------------------------------------------

கடைக்கு யாரு போனாலும் இவரும் கூடப்போவார். மார்க்கெட் போகும்போது மட்டும் கால் வலிக்காது . ஒரு நாள் தாத்தா மழையா இருக்கேன்னு கடைக்குக் கூட்டிட்டு போகல.( அம்மா தாத்தாக்கு பர்மிசன் குடுக்கல). வீடு வந்த பிறகு தாத்தா
“மழையா இருந்தது அதான் பயம்மா இருந்தது கடைக்குக் கூட்டிட்டு போக முடியல”ன்னு மத்தவங்க கிட்ட வருத்தப்பட்டுக் கொண்டிருக்க.. சார் பாதி பேச்சில் உள்ளே வந்தவர்....பயம்மா இருந்தது என்பதை மட்டும் காதில் வாங்கிவிட்டு...

“ இதுக்குத்தான் கூட யாரயாச்சும் கூட்டிட்டு போயிருந்தா உங்களுக்கு பயம்மா இருக்காது .. என்னைத்தான் விட்டுட்டுப் போயிட்டீங்களே “...

;)))))
--------------------------------------------------------
இடம்:(ஸ்வீட் கடையும் பொம்மைக் கடையும் பக்கத்து பக்கத்துல இருந்தது)

கடையில் எனக்காக எதுமே வாங்கமாட்டியா..?”
”என்ன வாங்கனும் உனக்கு?”
“ நான் என்ன டாய் வேணும்ன்னா கேட்டேன்? ஸ்வீட் தானே கேக்கறேன் “

இனிப்பு வாங்கியாச்சு.

இடம்:அக்கா சாட் பேப்பர் வாங்கும் கடை.
மறுபடியும் ‘எனக்கு எதுவுமே வாங்கமாட்டியா?
”அடிவிழப்போகுது என்னவேணும் உனக்கு இப்ப?”
என் கைகளைக் சேர்த்து அடிக்கமுடியாதபடி பிடித்துக்கொண்டு
அடிக்காம சரின்னு சொல்லி பிஸ்கட் வாங்கிக்குடு
“பிஸ்கட் வீட்டுல நிறைய இருக்கு அடிதான் விழப்போது சும்மா தொணத்தொணக்கிறே”
அடிக்கக்கூடாதுன்னு இப்பத்தானே சொன்னேன்
“நான் தான் அடிக்கலயே அடிவிழப்போகுதுன்னு தானே சொன்னேன், ஏய் உனக்கு எதுவும் வாங்கலன்னு திரும்பவும் எப்படி சொல்றே அதான் இனிப்பு வாங்கியாச்சே .. நீ மறந்துட்ட நானும் மறந்துட்டேன் பாரு”

“சரி சரி .. ஆமா இப்ப என்னத்துக்கு சிரிக்கிறே?”
அடே அடிக்கத்தான் கூடாது சிரிச்சா தப்பாடா?”